Sangathy
News

அஸ்வெசும பயனாளர்களுக்கான முதலாவது தவணை கொடுப்பனவு இந்த வாரம் – சமூக நலன்புரி நன்மைகள் சபை

Colombo (News 1st) அஸ்வெசும பயனாளர்களுக்கான முதலாவது தவணை கொடுப்பனவு இவ்வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான வங்கி கணக்குகளைத் திறக்கும் செயற்பாடு 95 வீதம் நிறைவடைந்துள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் அஸ்வெசும பயனாளர்களுக்கு அவர்களின் பிரிவிற்கேற்ப மாதாந்தம் 15000, 8,500, 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, அஸ்வெசும திட்டம் தொடர்பாக கிடைத்துள்ள மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் பின்னர், மற்றுமொரு பயனாளர்கள் குழு இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவரென சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்படவுள்ளன.

Related posts

AG urges that PSC is the authority for determining retirement age

Lincoln

கொழும்பு துறைமுக நகரில் சுங்கத்தீர்வையற்ற வர்த்தக நிலையங்களை அமைப்பது தொடர்பில் வர்த்தமானி வௌியீடு

John David

ஆழ்கடலை ஆராயவுள்ள இந்தியாவின் Matsya 6000 நீர்மூழ்கிக் கப்பல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy