Sangathy
News

வென்னப்புவ வங்கியொன்றில் தங்க நகைகள் கொள்ளை; விசாரணை ஆரம்பம்

Colombo (News 1s) வென்னப்புவ – அங்கம்பிட்டிய பகுதியிலுள்ள அரச வங்கியொன்றில் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 7 கோடி ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28 ஆம் திகதி இந்த தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இரவு வேளையில் வங்கிக்குள் நுழைந்த குழுவினரால் பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

Lanka’s economy shrank by record 7.8 percent last year

Lincoln

விமரிசையாக இடம்பெற்ற அயோத்தி இராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழா

John David

Colombo (News 1st) இலங்கை ரூபாவானது மூன்று வாரங்களுக்குள் ஆசியாவின் சிறந்த நாணய அலகாகப் பதிவாகி, மீண்டும் ஆசியாவின் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளதாக Bloomberg செய்திச்சேவை தெரிவித்துள்ளது. வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை ஆகியவற்றின் காரணமாக டொலருக்கான கேள்வி உயர்வடைந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளதாக Bloomberg குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் டொலரின் பெறுமதி 355 ரூபா வரை உயர்வடையும் என Hong Kong-இல் அமைந்துள்ள Natixis நிறுவனத்தை மேற்கோள்காட்டி Bloomberg இதனை தெரிவித்துள்ளது. டொலரின் இன்றைய விற்பனை பெறுமதி 336 ரூபா 16 சதம் வரை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy