Colombo (News 1st) ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்தி, புதிய கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை நியமிக்கப்பட்மை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை பரிசீலித்ததன் பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழுவினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.