Sangathy
News

உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட்  இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அவுஸ்திரேலிய  துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸூம் (Richard Marles) நேரில் காண உள்ளனர்.

இதனால் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மைதானம், அணிகள், பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளுக்காக 4,500 பொலிஸார் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.

உலகக்கிண்ண இறுதிப்போட்டியை முன்னிட்டு நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது.

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (19) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாபெரும் இறுதிபோட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பெட் கமிஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 

Related posts

Ratnayake vows to keep fighting

Lincoln

Prez won’t allow troublemakers in saffron robes to destabilise country

Lincoln

புதிய களனி பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy