Sangathy
News

மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Colombo (News 1st) சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஐவர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், கடந்த நாட்களில் முன்னெடுத்த விசாரணைகளில், மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்கவும் மேலும் 03 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னர் மருந்து விநியோகத்தை முன்னெடுத்ததாக கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

அஸ்தானா மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கசகஸ்தான் ஜனாதிபதி அழைப்பு

Lincoln

ஜனாதிபதி – பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இடையே சந்திப்பு

Lincoln

UN: Coronavirus pandemic could push tens of millions into chronic hunger

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy