Colombo (News 1st) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டம் தற்போது ஆரம்பித்துள்ளது.
இந்த கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வருகின்றது.
கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் சம்மேளன கூட்டம் நடைபெறுகிறது.
அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சி ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.