Sangathy
News

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2023ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 210,352 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாக இலங்கைசுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற 2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் இலக்கை விட 12,697 குறைவாக உள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2023 இல் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட 106.6 விகித அதிகரிப்பு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மாதத்திற்கு அதாவது கடந்த டிசம்பரில் அதிகபட்ச சுற்றுலாபயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இது டிசம்பர் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது128.7 விகிதம் அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அனர்த்த நிலைமையினால் உயர்தர பரீட்சை மத்திய நிலையமொன்றை மாற்ற நடவடிக்கை

John David

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலனை – நீதி அமைச்சர்

John David

காஸாவில் சிறைப்பட்டிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy