Colombo (News 1st) இன்று (13) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 897 சந்தேகநபர்கள் யுக்திய சுற்றிவளைப்பில் கைது செய்யபட்டுள்ளனர்.
24 சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான 22 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் சந்தேகநபர் பட்டியலில் இருந்த 37 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.