Sangathy
News

அக்மீமன பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் கைது

Colombo (News 1st) அக்மீமன பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் அந்தவத்த காம்கானம்கே சுகத் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் கடமையாற்றிய உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது, சந்தேகநபர் குறித்த அதிகாரிக்கு அழுத்தம் விடுத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட அக்மீமன பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர், யுக்திய சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

Lincoln

LIOC to establish 94 more gas stations here

Lincoln

சர்வகட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy