இஸ்ரேல்-ஹமாஸ் போர் சுமார் 5 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே போரை நிறுத்துவதற்கு கட்டார் உள்ளிட்ட பல நாடுகள் சமரச முயற்சி செய்தன. எனினும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காஸாவை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் உயிரழந்துள்ளனர். மேலும் 177 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதன்மூலம் இந்த போரில் பலியான பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 410 ஆக உயர்ந்தது. மேலும் இதுவரை சுமார் 71 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்ததாக பலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.