Colombo (News 1st) மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க கையொப்பத்துடன் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இதன்கீழ், மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.