Sangathy
India

பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் முதியவர்..!

நாட்டின் 18-வது பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ஆம் திகதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ஆம் திகதி எண்ணப்படுகின்றன.

இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 92 வயது முதியவர் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள சாஹிப்கஞ்ச் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தேர்தல் நடைமுறையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் குறித்து ரவிக்குமார் கேட்டறிந்தார்.

அப்போது ராஜ்மகால் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பத்கோரி கிராமத்தில் வசிக்கும் முதியவரான அன்சாரியிடம் நீங்கள் வாக்காளரா? எனத் தேர்தல் ஆணையர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அன்சாரி, ‘வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லாததால் நான் இதுவரை வாக்களித்தது இல்லை’ என்றார்.

இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த தேர்தல் ஆணையர் ரவிகுமார், அன்சாரியின் பெயரை வாக்காளர் பட்டியலில் உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தேர்தல் ஆணையருக்கு நன்றி தெரிவித்த அன்சாரி, “வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன்” என்றார்.

Related posts

ஐந்து நாட்கள் ஆடை அணியாத பெண்கள் : இந்தியாவில் இப்படி ஒரு கிராமம்..!

Lincoln

நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது : கமல்ஹாசன்

tharshi

9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் : கேரளாவை வச்சு செய்யப்போகும் வெயில்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy