Sangathy
Cinema World

ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்தில் இப்ப தான் அந்த சந்தேகமே வருது : ரசிகர்கள் கவலை..!

ஜி.வி. பிரகாஷ் குமார், சைந்தவி விவாகரத்து விஷயத்தில் தற்போது தான் சந்தேகம் வந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி விவாகரத்து பெறும் என கனவில் கூட நினைக்கவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜி.வி. பிரகாஷ் குமாரும், அவரின் காதல் மனைவியான பாடகி சைந்தவியும் பிரிந்துவிட்டதை ரசிகர்களால் இன்னும் நம்ப முடியவில்லை. 24 ஆண்டு கால நட்பும், காதலும் இப்படியாகிவிட்டதே என்பதே ரசிகர்களின் கவலை.

உண்மை காதல் அனாதையாகிவிட்டது. இந்த ஜோடி பிரிந்திருக்கக் கூடாது என்கிறார்கள். அவர்கள் பிரிவை அறிவித்ததும் இவர் தான் காரணம், அவர் தான் காரணம் என சிலரின் பெயர்கள் அடிபட்டது. அதை பார்த்த ஜி.வி. பிரகாஷோ யாரையும் குறை சொல்ல வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார். சைந்தவியோ தங்களின் பிரிவுக்கு வெளியாட்கள் யாரும் காரணம் இல்லை என அறிக்கை வெளியிட்டார்.

விவாகரத்து குறித்து விளக்கம் அளித்து சைந்தவி போட்ட ட்வீட்டை பார்த்த வேகத்தில் கமெண்ட் போட்டார் ஜி.வி. பிரகாஷ். இவர்கள் இருவரும் பிரிந்த பிறகும் கூட நட்பாக இப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்த ஜோடி விவாகரத்து தான் சரியான முடிவு என்று நினைக்க அப்படி என்ன நடந்திருக்கும் என்கிற சந்தேகம் தற்போது தான் வருகிறது. என்ன காரணத்தால் பிரிந்தார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரிவை அறிவித்துவிட்டும் நட்பை கொண்டாடுகிறார்கள் ஜி.வி. பிரகாஷும், சைந்தவியும். இதை பார்க்கவே பெருமையாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்படியே வைத்திருக்கிறார் சைந்தவி.

திருமண புகைப்படங்களை கூட சைந்தவி நீக்கவில்லை. 24 ஆண்டுகளாக நட்பாக இருக்கிறோம், இனியும் இந்த நட்பு தொடரும் என சைந்தவி தெரிவித்தார். அந்த நட்பு நிச்சயம் தொடரும் என்பது அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே தெரிகிறது.

இருந்தாலும் அந்த நட்பு மெல்ல மெல்ல மீண்டும் காதலாகிவிட வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது. 12 ஆண்டுகள் காதலித்த அவர்கள் திருமணமாகி 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்.

மகள் அன்வி பிறந்த பிறகு ஜி.வி. பிரகாஷ் மேலும் பொறுப்பாக நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார் என அவருக்கு நெருக்கமான பலரும் தெரிவித்தனர். ஏன் ஜி.வி. பிரகாஷின் நண்பரான தனுஷ் கூட பெருமையாக பேசினார். விவாகரத்தால் அன்வியால் அப்பா, அம்மாவுடன் ஒரே வீட்டில் இருக்க முடியாதே என பலரும் ஃபீல் பண்ணுகிறார்கள்.

Related posts

ரூ. 500 கோடி மரகத நெக்லெஸ், ரூ. 53 கோடி வைர மோதிரம் அணிந்து அனைவரையும் சொக்க வைத்த நீதா அம்பானி..!

Lincoln

சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்..!

tharshi

மாரடைப்பில் காலமான டேனியல் பாலாஜி : நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy