Sangathy
News

சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 

 

வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 48  சிறுவர் தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் பிரகாரம் நாட்டில் இதுவரை 600 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்த தொழு நோயாளர்களில் 8.4 வீதமானோர் சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தொழு நோயாளர் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, அடுத்த மாதத்திலிருந்து தொழுநோயாளிகளை அடையாளம் காணும் செயற்பாடுகளில் தன்னார்வ குழுக்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தை உள்ளடக்கி முதல் கட்டத்தில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோயாளர் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

Related posts

Colombo (News 1st) பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தினை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். குறித்த யுவதியின் மரணத்திற்கான உறுதியான காரணத்தை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தற்போது வைத்தியசாலைக்கு சென்று தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், சமோதி சந்தீபனி எனும் குறித்த யுவதிக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்ட நாளில் மேலும் 12 பேருக்கு அதே ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 2715 பேருக்கு இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த ஊசி மருந்தானது 2013 ஆம் ஆண்டு முதல் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Lincoln

Seylan Bank appoints Sunjeevani Kotakadeniya and Averil Ludowyke to the Board of Directors

Lincoln

யாழ்ப்பாணத்தில் பண மோசடி சம்பவங்கள் அதிகரிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy