Colombo (News 1st) 2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்துடன் தொடர்புடைய செயன்முறை பரீட்சைகள் நாளை(12) முதல் ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த செயன்முறை பரீட்சைகள் இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
1911 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொண்டு இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமென அவர் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.