Sangathy
News

வவுனியாவில் STF ஜீப் விபத்திற்குள்ளானதில் 2 கான்ஸ்டபிள்கள் உயிரிழப்பு

Colombo (News 1st) வவுனியா – வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF)  கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிரடிப் படையின் வீரர்கள் சிலரை ஏற்றிச்சென்ற ஜீப் வண்டியொன்று கால்நடையொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

மதவாச்சி மற்றும் குருணாகல் பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுகளை உடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஏனைய STF வீரர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Colombo (News 1st) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தயாரான போது, பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வேறொரு இடத்திலிருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க சிவில் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Lincoln

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மூன்று நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்ப்பு

John David

பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளையில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானம் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy