Colombo (News 1st) வட மத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (10) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழையுடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பதுளை, கேகாலை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையுடன் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடி மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.