இஸ்ரேல்-ஹமாஸ் போரால் போதிய ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இது குறித்து காஸா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல் கித்ரா கூறியதாவது..,
“காஸாவின் கமால் அத்வான் வைத்தியசாலையில் ஊட்டச்சத்து மற்றும் நீரிழப்பு காரணமாக கடந்த சில நாட்களில் குறைந்தது 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
மின்பிறப்பாக்கி மற்றும் ஒட்சிசன் நிறுத்தம், வைத்திய திறன்களின் பலவீனம் காரணமாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஊட்டச்சத்து மற்றும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள 6 குழந்தைகளின் நிலை குறித்து நாங்கள் பயம் கொள்கிறோம்” என்றார்.