யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை ஜெகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-03-2024
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும்
நீங்களின்றிய துயரங்கள் இன்னும்
ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில்
உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என
ஏங்குவோம் நாங்கள்!
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
You must be logged in to post a comment.