பிறப்பு09 DEC 1935, இறப்பு28 NOV 2022
வயது 86
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) நல்லூர், Sri Lanka
யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 17/11/2023
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்…
அன்னார் பிறந்து வளர்ந்த இடமாகிய நெடுந்தீவில் 28/11/2023 செவ்வாய்கிழமை நெழுவினி பிள்ளையார் ஆலயத்தில்அபிசேகம் நடைபெற்று பின் மதியபோசனம் அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்