Sangathy
Srilanka

பிக்கு தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு..!

கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒருவர் காயமடைந்து வீடொன்றிற்குள் இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காயமடைந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், காயமடைந்தவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கொடவத்தை, மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான பிக்கு உயிரிழந்தவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் விகாரை ஒன்றில் வசிக்காமல் மாரவில பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது அவர் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொழும்பில் இருந்து யாழ் சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்..!

tharshi

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

tharshi

ஓட்டப் போட்டியின் போது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy