Sangathy
Srilanka

“அரசாங்கத்திற்கு எச்சரிக்கையை கொடுத்திருக்கின்றோம்” : இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர்..!

அரசாங்கத்திற்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கி இருக்கின்றோம் ஜனாதிபதி ரணில் அவர்கள் உடனடியாக எமது பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையில் உள்ள அநேகமான அதிபர் ஆசிரியர்களை கொழும்புக்கு வரவழைத்து நாங்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் மகிந்த ஜெயசிங்க, தேசிய அமைப்பாளர் பிரதீப் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய அமைப்பாளர்,

12 ஆம் திகதி இலங்கை வரலாற்றிலே 101 கல்வி வளையங்களிலும் மிகவும் வெற்றிகரமாக அதிபர் ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு மிக வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 27 வருடங்களாக அதிபர் ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் இருந்தது நாங்கள் 2001 ஆம் ஆண்டு பாரிய போராட்டத்தின் மூலமாக மூன்றில் ஒரு பகுதி சம்பளத்தை 2022 ஆம் ஆண்டு பெற்றோம் அதற்குப் பின்பு 2023, 2024 வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் அதிபர்களுடைய சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சும் அதுபோல நிதி அமைச்சும் பல பொய்களை கூறியபோதும் எவ்வித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.

நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் பார்த்துக் கொண்டிருந்தோம் அதிபர் ஆசிரியர்களுடைய சம்பள உயர்வை இந்த அரசாங்கம் வழங்கும் என்று ஆனால் இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது. பல போராட்டங்களை 2023 ஆம் ஆண்டு செய்திருந்தோம். அந்த ஜனநாயக நியாயமான போராட்டம் மீது ரணில் ராஜபக்ச அரசாங்கம் தடியடி கொண்டும் தண்ணீர் தாக்குதலும் ஆசிரியர் அதிபர்கள் மீது மேற்கொண்டார்கள் நாங்கள் பின்னோக்கி செல்லவில்லை ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு நாங்கள் ஒரு எச்சரிக்கையை கொடுத்திருக்கின்றோம் நாங்கள் மீண்டும் நமது போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

விசேடமாக போராட்டம் வடக்கில் 13 வலயங்களிலும் அதேபோன்று கிழக்கில் அனைத்து வலயங்களிலும் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கல்வி வலயங்களிலும் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தை நடத்தி இருக்கின்றார்கள்.

நாங்கள் ரணில் அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை கூறுகின்றோம் இனிவரும் காலங்களில் அதிபர் ஆசிரியர்களின் போராட்டங்கள் வடக்கு கிழக்கில் பாரிய முனைப்புடன் வெடிக்கும் என்கின்ற எச்சரிக்கையை கொடுக்கின்றோம்.

எனவே நாங்கள் இன்னும் அவர்களுக்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கி இருக்கின்றோம் ஜனாதிபதி ரணில் அவர்கள் உடனடியாக எமது பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையில் உள்ள அநேகமான அதிபர் ஆசிரியர்களை கொழும்புக்கு வரவழைத்து நாங்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.

எனவே உடனடியாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க கூறி நாங்கள் கேட்கின்றோம் இந்த நாட்டில் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதி இன்று இல்லை நாங்கள் போராடுவது வெறுமனே அதிபர் ஆசிரியர்களது சம்பள உயர்வுக்காக மாத்திரமல்ல இலவச கல்வியை பாதுகாப்பதற்காகவும் தான் நாங்கள் போராடுகின்றோம்.

அது மாத்திரமில்லாத பாடசாலை மாணவர்கள் கற்றல் உபகரணங்களை வாங்க முடியாமல் கல்வியை இடையில் நிறுத்திவிட்டு அவர்கள் வீடு செல்கின்றார்கள் எனவே அந்த மாணவர்களுக்கு மானிய அடிப்படையில் கற்றல் உபகரங்களை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும் என நாங்கள் போராடுகின்றோம்.

அது மாத்திரமல்ல இலங்கையில் இலவச கல்வியை குழி தோண்டி புதைக்கின்ற சட்டமூலங்களை இவர்கள் கொண்டு வருகின்றார்கள் எனவே அதற்கு நாங்கள் இடம் அளிக்க மாட்டோம் எனவே இலவச கல்வியை பாதுகாப்பதற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் அது மாத்திரம் இல்லாது பாடசாலையை கொண்டு செல்வதற்கான நிதியை இன்று பெற்றோர்களிடம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகின்றது அரசு உடனடியாக பெற்றோர்களிடமிருந்து பணம் வசூலிப்பதை இடை நிறுத்திவிட்டு பாடசாலை நிர்வாகத்தை மேற்கொள்ளக்கூடிய நிதியினை அரசாங்கம் வழங்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் நாட்டில் உள்ள பெற்றோர்கள் பொதுமக்கள் இணைந்து கொண்டு இந்த போராட்டத்தை நடத்துவார்கள் ஆனால் நேற்று வெற்றி அளித்த இந்த போராட்டத்தை ஒரு சிலர் அரசாங்கத்திற்கு பின் நின்று கூலிப்படைகளாக செயல்படுகின்ற சிலர் அதிபர் ஆசிரியர்களை வேறு கோணத்தில் அல்லது வேறு பாதையில் திசை திருப்புகின்றார்கள்.

எனவே அதிபர் ஆசிரியர்களை இந்த கூலிப்படைகளை கண்டு நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் இவர்கள் ஆசிரியர் சங்கம் என்கின்ற போர்வையில் அரசாங்கத்தினுடைய கருப்பு பணத்திற்கு விலை போகின்றார்கள் லஞ்சத்திற்காக இவர்கள் ஆசிரியர்களை பிழையான முறையில் வழிநடத்துகின்றார்கள் எனவே அவர்களுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையான முறையில் செயல்படுங்கள் என தெரிவித்தார்.

Related posts

எனக்கு வாக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை – போதைப்பொளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் : சஜித்..!

tharshi

யாழில் சந்தேகத்துக்கிடமான வீடொன்று முற்றுகை : ஆணொருவருடன் இரு பெண்கள் கைது..!

tharshi

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்னால் மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் போராட்டம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy