Sangathy
India

பள்ளி வாகனத்தில் திடீர் தீ : 17 மாணவர்கள் உயிர் தப்பினர்..!

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் படித்து வருவதால், அவர்களை பள்ளிக்குச் சொந்தமான பஸ் சென்று அழைத்து வருவதுண்டு.

இன்று காலையும் மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு பஸ், பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 17 மாணவ-மாணவிகள் இருந்தனர். செங்கனூர் பகுதியில் பஸ் வந்தபோது, பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

இதனை கவனித்த டிரைவர், உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் இருந்த மாணவ-மாணவிகளையும் கீழே இறங்கச் செய்தார். சற்று நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. சரியான நேரத்தில் டிரைவர் புகையை கவனித்து மாணவ-மாணவிகளை கீழே இறக்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

Related posts

அமேசான் டெலிவரியில் வந்த பாம்பு : அதிர்ச்சியில் வாடிக்கையாளர்..!

tharshi

நீட் முறைகேடு.. உள்ளே விளையாடிய ரூ.300 கோடி.. அதிரவைக்கும் பேப்பர் லீக் மாஃபியா..!

tharshi

கொரோனாவை விட 100 மடங்கு அபாயகரமானது பறவைக் காய்ச்சல் தொற்று..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy