Sangathy
Breaking NewsSrilanka

நயினாதீவிற்கு பயணித்த படகு விபத்து : ஒருவர் பலி..!

குறிகட்டுவானிலிருந்து நயினாதீவிற்கு பயணித்த படகொன்று கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நயினாதீவிற்கு கருங்கற்களை ஏற்றிச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது படகில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிரிழந்தவர் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊர்காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்டுநாயக்கவை உலுக்கிய கோர விபத்து..!

tharshi

பட்டாசு வெடிப்பால் அதிகமானோருக்கு கண் பாதிப்பு : பொது மக்களிடம் கோரிக்கை..!

tharshi

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy