Sangathy
World Politics

இத்தாலியில் இந்திய தொழிலாளி இறந்த வழக்கில் பண்ணை உரிமையாளர் கைது..!

இந்தியாவைச் சேர்ந்த சத்னம் சிங் (31) இத்தாலியில் கூலித் தொழில் செய்து வந்தார். ரோம் நகருக்கு அருகிலுள்ள லாசியோவில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்தார். அவர் வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எந்திரத்தில் அவரது கை சிக்கி துண்டிக்கப்பட்டது.

அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அவரது முதலாளி குப்பை கொட்டும் இடத்துக்கு அருகில் விட்டு சென்றுவிட்டார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சத்னம் சிங் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாராளுமன்றத்தில் பேசும்போது, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சத்னம் சிங் இறந்த விவகாரத்தில் பண்ணை உரிமையாளர் அன்டோனெல்லோ லோவாடோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Related posts

12 வது முறையாக தந்தையானார் எலான் மஸ்க்..!

tharshi

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!

tharshi

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy