Sangathy
World Politics

தைவானின் மீன்பிடி படகை சிறைப்பிடித்த சீனா..!

சீனாவின் தென் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவுதான் தைவான். தனக்கு சொந்தமான மாகாணமாகவே தைவானை சீனா கருதுகிறது. அதனாலே தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா துடிக்கிறது.

தெற்கு சீனாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மக்களே தைவானின் ஆதி குடிமக்கள் என்பதாலும், சீனாவின் சிங் வம்சம் ஆண்ட பகுதியே தைவான் என்பதாலும், தைவான் தங்களுக்கு தான் சொந்தம் என்று நீண்ட காலமாகவே சீனா உரிமைக் கொண்டாடி வருகிறது.

இதனால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் சீனக் கடற்கரையில் தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென் தீவின் கடற்பரப்பில் இருந்து தைவானை சேர்ந்த மீன்பிடிப்படகு மற்றும் அதில் இருந்தவர்களை சீனா சிறைபிடித்துள்ளது.

இதையடுத்து மீன்பிடி படகு மற்றும் பணியாளர்களை விடுவிக்க தைவான் கடலோர காவல்படை சீனாவிடம் கேட்டு கொண்டது. ஆனால் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தைவானின் கடலோரக் காவல்படையிடம் சீனா தெரிவித்து உள்ளது.

Related posts

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்து : 45 பேர் பலி..!

tharshi

விமானத்தில் இருக்கைக்காக சண்டை போட்ட பயணிகள்..!

tharshi

பாகிஸ்தானில் கனமழை : 87 பேர் உயிரிழப்பு – வீடுகள் கடும் சேதம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy