இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவாhல் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான போருக்குள் இழுக்கப்பட்டுள்ளார் என்று அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஏப்ரல் 18ஆம் திகதி பேசிய அவர்,
‘அவர் ஒரு போரில் நுழைந்தார் – நெதன்யாகுவால் அவர் இழுக்கப்பட்டார். இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க மக்கள் விரும்பாத ஒரு போரில் நுழைந்து அமெரிக்க படையினரை ஆபத்தில் சிக்க வைத்துள்ளார்.
அவரின் இந்தப் பதிவுக்கு ட்ரம்ப் உடனடியாக எதிர்வினையாற்றவில்லை. ஆனால், அவர் தனது சமூகவலைத்தளதில், இஸ்ரேலை சிறந்த நண்பன் என்று கூறியுள்ளார்.
அந்தப் பதிவில், மக்களுக்கு இஸ்Nலை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்கள் அமெரிக்காவின் மாபெரும் நண்பன் என்பதை நிரூபித்துள்ளனர். அவர்கள் துணிச்சலானவர்கள் – தைரியமானவர்கள் – விசுவாசமானவர்கள் அத்தடன் புத்திசாலிகள். மோதல் மற்றும் நெருக்கடியான தருணங்களில் தங்கள் உண்மையான முகத்தைக் காட்டிய மற்றவர்களைப் போலல்லாமல் இஸ்ரேல் கடுமையாகப் போராடுகிறது. எப்படி வெற்றி பெறுவது என்பதையும் அறிந்திருக்கிறது – என்று குறிப்பிட்டுள்ளார்.
