வயது 68
பொலிகண்டி, Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசிங்கம் புஷ்பராணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த எங்கள்
குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே….!
வசந்தகால ஒளிவிளக்கே…!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்…!
தாயே உங்கள் முகம் பார்க்காமல்
கலங்கி நின்றோம் அன்றும்,
இன்றும் உங்கள் இழப்பின்
வலி நெஞ்சுக்குள் படபடக்குது
ஆண்டுகள் ஐந்தல்ல நம்மூச்சுள்ள
வரை உங்களைமறவோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
