யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதாகரன் மார்க்கண்டு அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலுப்பிள்ளை வேலாசிப்பிள்ளை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- இலங்கை) கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம்(தாய்மாமன்) விஜயலட்சுமி(தாய்மாமி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருபாகரன்(சுவிஸ்), தசிகரன்(கனடா), காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கங்காதேவி(சுவிஸ்), அஞ்சலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிசோன்(சுவிஸ்), கிருசன்(சுவிஸ்), சஞ்ஜித்(கனடா), யோயினா(கனடா), சஜீனா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
