புயல் வருகிறது யாராலும் தடுக்க முடியாது – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

புயல் வரு​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்​கா, ஈரான் இடையே தற்​காலிக போர் நிறுத்​தம் அமுலில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று ஒரு புகைப்​படத்தை பதி​விட்​டார். அதில் அவர் கையில் அதிநவீன துப்​பாக்​கி​யுடன் நிற்​கிறார். மலை சூழ்ந்த பின்புறத்தில் வெடிகுண்​டு​கள் வெடித்​துச் சிதறுகின்​றன.

இந்த புகைப்​படத்​துடன் ஜனாதிபதி ட்ரம்ப் வெளி​யிட்ட பதி​வில், “அணு சக்தி தொடர்​பான ஒப்பந்தத்தில் கையெழுத்​திட ஈரான் தொடர்ந்து மறுத்து வரு​கின்றது. அந்த நாடு விரை​வில் புத்திசாலித்தன​மான முடிவை எடுக்க வேண்​டும். இனிமேல் பொறுமை காக்க முடி​யாது. தொடர்ந்து நல்​ல​வ​னாக இருக்க மாட்​டேன்” என்று தெரி​வித்​தார்.

சில மணி நேர இடைவெளி​யில் அவர் வெளி​யிட்ட மற்​றொரு பதி​வில், “புயல் வந்து கொண்​டிருக்​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடி​யாது” என்று தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஈரான் மீது மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்த அமெரிக்க இராணுவம் தயா​ராகி வரு​கின்றது. குறிப்​பாக ஈரானின் எரிசக்தி நிலை​யங்​கள் மீது தாக்​குதல் நடத்த திட்​ட​மிடப்​பட்டுள்​ளது.

ஹோர்முஸ் நீரிணை பகு​தியை இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றவும் வியூ​கம் வகுக்​கப்​பட்டு இருக்​கின்றது. ஈரானில் தரையிறங்கி அந்த நாட்​டில் உள்ள செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை பறி​முதல் செய்​ய​வும் இரகசிய திட்​டம் தீட்​டப்​பட்டு இருக்​கிறது.

இதுதொடர்​பாக அமெரிக்க இராணுவ தளப​தி​கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​பிடம் விரிவான ஆலோ​சனை நடத்தியுள்​ளனர். இதை சுட்டிக்காட்டும் வித​மாகவே புயல் வந்து கொண்​டிருக்​கிறது என்று ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். என அந்த வட்டாரங்​கள் தெரிவித்துள்​ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles