நான் இனி ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை – இவ்வாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே மேற்க்ணடவாறு அவர் தெரிவித்தார்.
‘அரசியலுக்கு வருவதற்கு எதிர்பார்க்கவில்லை. நான் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றினார்’, என்றும் அவர் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர்இ அலி சப்ரி அரசியலுக்கு வந்தார். அவரின் ஆட்சிக் காலத்தில் தேசியப் பட்டியல் வழங்கப்பட்டது. அமைச்சு பதவியையும் வகித்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அமைச்சு பதவியை துறந்தார். பின்னர் ரணில் ஆட்சியில் நிதி அமைச்சராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
