செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 26ஆம் நாளான இன்று 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
அதில் ஏற்கனவே 6 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்குவதாகக் கூறப்படுகின்றது. மேலும், ஓர் எலும்புக்கூட்டின் இடுப்புப் பகுதியில் இருந்து இரண்டு நாணயங்கள் சான்று பொருள்களாக மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 366 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 357 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
