ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, தாங்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தினால்,கடும் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இறுதிச் சடங்கு நிகழ்வுகளையொட்டி தெஹ்ரான் மஷ்ஹத் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்,தற்காலிக வான்வெளி கட்டுப்பாடுகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் குடும்பத்தினருடன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
