இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானின் மகான் எயார் விமான நிறுவனத்துக்கு விற்பனை முகவர்களாகச் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானைச் சோ்ந்த மகான் எயார் விமான நிறுவனம், போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் தனது விமானங்களில் அந்த நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு வீரர்களை ஏற்றிச் செல்லுதல், ஆயுதங்களைக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட உதவிகளைச் செய்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதையடுத்து, அந்த விமான நிறுவனத்துக்கு உதவி செய்ததாகக் கூறி, இந்தியாவின் அதன் விற்பனை முகவராகச் செயல்படும் ஸ்கீஸ் ரவல்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதேபோல், சீனாவைச் சோ்ந்த ஷாங்காய் விங்ஸ் நிறுவனம், ரஷ்யாவை சோ்ந்த எயார் கார்கோ நிறுவனம், ஷாங்காய் எலைட் இன்டர்நேஷனல் நிறுவனம், சீனாவை சோ்ந்த தாங் ஷின் (ஷாங்காய் விங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்) உள்ளிட்டோருக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிதித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஈரானின் ஐ.ஆா்.ஜி.சி. அல்லது மகான் எயார் நிறுவனத்துக்கு நிதி ரீதியாகவும், தளவாட ரீதியாகவும் அல்லது வா்த்தக ரீதியாகவும் உதவி செய்வோர், பயங்கரவாத அமைப்பை தக்கவைப்பவராக கருதப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஸ்கீஸ் ரவல்ஸ் நிறுவனமானது, டில்லி மற்றும் ஸ்ரீநகரில் அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகின்றது. அந்நிறுவனம் தனது வலைதளத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஈரானின் மகான் எயார் நிறுவன முகவராகச் செயல்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மேற்காசியாவில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெறுகின்றது. இந்தச் சூழ்நிலையில் ஈரானின் விமான நிறுவனத்துக்கு உதவி செய்வதாகக் கூறி இந்திய நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles