
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை கொழும்பில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்புத் திட்டங்களின் மீளாய்வு ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்திய ரூபாய் மதிப்பிலான கடன் வசதிகள் குறித்த ஒப்பந்தங்களை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டனர்.
இந்த கடன் வசதிகள், புயலுக்குப் பிறகு ஏற்பட்ட புனரமைப்பு, உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கொள்முதல் தேவைகளுக்கு ஆதரவளிக்கும்.
