இத்தாலியில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக எல்லைச் சோதனைகளை அறிமுகப்படுத்தப் போவதாக ஸ்பெய்ன் நேற்று அறிவித்தது.
இந்தச் சோதனைகள், ஓகஸ்ட் 8 நள்ளிரவில் தொடங்கி செப்ரெம்பர் 7 வரை நீடிக்கும் என்று ஸ்பெய்ன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தாலி தனது எல்லைச் சோதனைகளை உடனடியாக நீக்கவில்லை என்றால், பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஸ்பெய்ன் அச்சுறுத்தியது,
இதற்கு பதலடி கொடுத்த இத்தாலி எக்காரணம் கொண்டும் ஸ்பெய்ன் நாட்டவர்களுக்கான எல்லை சோதனை நீக்கப்படாது எனக் குறிப்பிட்டது.
இதனைத் தொடர்ந்தே இந்தாலி பிரஜைகளுக்கான சோதனைகளை ஸ்பெய்ன் கடுமையாக்கியுள்ளது.
