ஜப்பானும் உரிமை கோரும் குரில் தீவுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பயணித்ததை தொடர்ந்து ஜப்பான் கண்டனம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஜப்பானிய தூதரை மொஸ்கோ வரவழைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் வடக்குப் பிரதேசங்கள் என்று அழைக்கப்படும் இந்த தீவு 1945இல் சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகள் சிக்கல் நிலையை அடைந்தன.
புடின் அருகிலுள்ள ரஷ்ய தீவான சகாலினுக்குச் சென்ற பிறகு இந்தத் தீவுகளுக்குப் பயணம் செய்தார். இதைத் தொடர்ந்து, ஜப்பான் தனது எதிர்ப்பாக ரஷ்ய தூதரை வரவழைத்தது.
இதற்குப் பதிலடியாக, மொஸ்கோ ஜப்பானிய தூதர் அகிரா முட்டோவை வரவழைத்தது.
புடினின் பயணத்தை விமர்சித்ததன் மூலம் ஜப்பானிய அதிகாரிகள் “நாகரிகத்தின் எல்லையை மீறிவிட்டனர்” என்று வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் விமர்சித்துள்ளார்.
“நாங்கள் ஜப்பானிய தூதரை வரவழைத்துள்ளோம்,” என்று லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், முட்டோ உடனடியாக வர முடியாது என்று டோக்கியோ ஆரம்பத்தில் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அவர் மொஸ்கோவில் இல்லை என்றோ அல்லது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றோ எங்களிடம் கூறப்பட்டது. எங்களுக்கு நிலைமை சரியாகப் புரியவில்லை,” என்று லாவ்ரோவ் கூறினார்.
