Sangathy
News

மின்வெட்டு தொடர்பில் ஆராய வௌியகக் குழு நியமனம்

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டமை தொடர்பில் ஆராய வௌியகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மின்வெட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக அரச புலனாய்வு சேவைப் பிரிவின் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை(09) மாலை 05.10 அளவில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டது.

சுமார் ஐந்தரை மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர முடிந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

கொத்மலை – பியகம மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையினாலேயே நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டதாக மின்சார சபை பின்னர் தெரிவித்திருந்தது.

Related posts

கோப் குழுவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு

John David

Govt. MP slams Finance Ministry over gaping holes in tax collection system

Lincoln

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று(13)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy