Colombo (News 1st) போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான ‘குடு சலிந்து’ என்பவரின் உதவியாளர் ஒருவர் துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
பியுமி ஹஸ்திக எனும் குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகராக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள குடு சலிந்துவுடன் இணைந்து சந்தேகநபர் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குடு சலிந்து அண்மையில் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.