புதிய காற்றழுத்தம் : 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கேரளா மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் கேரளாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அடுத்த 7 நாட்களுக்கு கேரளாவில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை கோடை மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 30 ஆம் திகதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. நாட்டின் பெரும்பாலான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் மழையாக தென்மேற்கு பருவமழை உள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம்தான்.

தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நான்கு மாதங்கள் பெய்யும். இந்த ஆண்டு அந்தமானில் கடந்த மே 19ஆம் திகதி தென்மேற்கு பருவம் மழை தொடங்கியது. அதனை தொடர்ந்து கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலும் தென் தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் நேற்று முன்தினம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் கேரளாவை ஒட்டி புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகி இருப்பதால் அடுத்த ஏழு நாட்களுக்கு மாநிலத்தில் பரவலாக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மழையுடன் இடி மின்னலும் இருக்கும் என்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கேரளாவில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மழை மற்றும் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மதங்கரை அணையின் நான்கு ஷட்டர்களும் தலா இரண்டு மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளதால் மூவாட்டுபுழா மற்றும் தொடுபுழா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நேற்றிரவு பெய்த தொடர் கனமழையால் மீனச்சில் மற்றும் மணிமாலா ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேரள கடற் பகுதியில் மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்பதால் தெற்கு கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக கடலோர பகுதிகளில் மீன் பிடிக்க தடை ஏதும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் முழுவதும் இரவு பயணத்திற்கு தடைவிதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இடுக்கியில் நேற்று பெய்த கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.வெள்ளம் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் இரவு நேரங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles