கடை உரிமையாளருக்கும் ஊழியருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடை உரிமையாளர் தாக்கியத்தில் ஊழியர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளரான 42 வயதுடையவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.