பல ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று (17) தங்களின் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்
சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் பேரணி இன்று அநுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இன்று தென் மாகாணத்தில் தனது முதல் கூட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
அனைத்து மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, லாந்தர் சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரம் இன்று கம்பஹாவில் ஆரம்பமாகவுள்ளது.
காலை 11 மணிக்கு கம்பஹா பழைய பஸ் நிலையத்தில் திருமண பேரணி நடைபெறவுள்ளது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பேரணிகள் பிற்பகல் 2 மணிக்கு மினுவாங்கொடையிலும், மாலை 4 மணிக்கு நாத்தாண்டியிலும், மாலை 6 மணிக்கு சிலாபத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.