அண்மையில் வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் பற்றிய மேலதிக தகவலின்படி டுபாயில் இருந்து கிடைக்கப்பெற்ற பணிப்பின் பேரிலேயே தாக்குதலானது இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.