யாழ்ப்பாணத்தின் யாழ் கண்டி வீதியில் மாவட்ட செயலகத்தை அண்மித்து அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியிலிருந்து மூன்று பெண்களை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போது எவ்வித பதிவுகளும் இன்றி குறித்த மூன்று பெண்களும் தங்கியிருந்ததுடன் பொலிசாரின் விசாரணையில் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தவறியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூன்று யுவதிகளும் நீதிபதியின் உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.