சோனியா, ராகுல் காந்தி ஆகியோரை அடுத்த மாதம் சந்திக்கிறார் முதல்வர் விஜய்!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை முதல்வர் விஜய் ஜூன் 11ஆம் திகதி சந்திப்பார் என காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், முதல்வர் விஜய் தனது இந்த டில்லி பயணத்தை முழுக்க முழுக்க அரசியல் பயணமாக வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார் என நினைக்கிறேன். தற்போது பிரதமரை சந்தித்து சென்றுவிட்டார்.

அடுத்ததாக ஜூன் 11ஆம் திகதி முதல்வர் விஜய் டில்லி வருகிறார். அப்போது அவர் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் கண்டிப்பாக சந்திப்பார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பலர் இன்று டெல்லி வந்துள்ளனர். அதோடு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் முதல்வரோடு சகஜமாக பேச முடியாத நிலை ஒரு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிலை திறப்பு விழாவையும் விஜய் ஒத்திவைத்துள்ளார். எனவே, முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காதமை குறித்து கேள்வி எழுப்ப ஏதுமில்லை – என தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles