சுவீடன் அரசாங்கம் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கையடக்கத்தொலைபேசிகளுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது.
மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் கையடக்கத்தொலைபேசிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுவீடன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
7 முதல் 16 வயது வரையிலான அனைத்து ஆரம்ப மற்றும் கீழ்-நிலை இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கும் இத்தடை பொருந்தும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையானது நடப்பு கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
அதேவேளை ஏற்கனவே பிரான்ஸ், நெதர்லாந்து, மற்றும் டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் சுவீடனும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
