அ.தி.மு.கவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி

அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறார் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்நிலையில், இன்று (14) முதல் நான் வகித்து வரும் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும், தற்போதுள்ள அரசியல் சூழ் நிலையைக் கருதிற் கொண்டும், நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அ.தி.மு.கவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், பிற அணி மாநில செயலாளர்கள். மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, மற்றும் பேரூர், நகரச் செயலாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles