தெஹ்ரான் மற்றும் டுபாய்க்கு இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெஹ்ரானின் இமாம் கொமெய்னி வானூர்தி நிலையத்தின் தலைவர் ராமின் கஷேஃபசார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தெஹ்ரான் – டுபாய் விமான பாதையை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் செபெஹ்ரான் விமான நிறுவனத்தின் இணையதளத்தில் திங்கட்கிழமை காலை 10:40 மணிக்கு (07:30 GMT) டுபாய் செல்லும் விமானத்துக்கான பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அரபு இராச்சியத்தின் இலக்குகள் மீது ஈரான் தாக்குதலகளால் தெஹ்ரான் – டுபாய் வானூர்தி சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது விமான சேவைகள் மீண்டும் தொடங்க்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
