Colombo (News 1st) வத்தளை – பள்ளியாவத்தை, லன்சியாவத்தை முகத்துவாரத்திற்கு அருகில் ஆண் குழந்தையொன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
குழந்தை இதுவரை அடையாளங்காணப்படவில்லை என பொலிஸார் கூறினர்.
குழந்தையின் சடலம் ராகம போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.