Sangathy
News

சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Colombo (News 1st) சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச்செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் செல்வதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பத்துடனான காலநிலை தொடரும் போது, ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உளநலம் மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மருந்துகளை உட்கொள்வோர் இவ்வாறான அதிக வெப்பத்துடனான காலப்பகுதியில் அதிகளவு நீரை பருகுவது அத்தியாவசியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடலில் நீரின் அளவு குறையுமிடத்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, அனைத்து தரப்பினரும் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமானதென  கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 2,10,798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது

Related posts

NEWS

John David

எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை நீடிக்கும்

John David

Colombo (News 1st) மலையக ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலொன்று தலவாக்கலையில் தடம்புரண்டுள்ளது. இன்று மாலை 04.50 மணியளவில் ரயில் தடம்புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலை தடமேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலையக ரயில் மார்க்கத்திலான இரவு தபால் ரயில் இன்று தாமதமடையும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy